Tuesday, 30 September 2014

மீண்டும் தெலுங்கு படத்தில் நயன்தாரா!


வயதான ஹீரோக்களை விட இளவட்ட நடிகர்களெல்லாம் நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டுமென்று துடியாய் துடித்துக்கொண்டு நிற்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, தமிழில, இது நம்ம ஆளு, வாலு, நண்பேன்டா, தனி ஒருவன், மாஸ் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.

இந்த நிலையில், விஜயசேதுபதி உள்ளிட்ட சில வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நயனை ஜோடி சேர்க்கும் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, வளர்ந்து வரும் சில இளவட்ட ஹீோக்களும் நயனுடன் கட்டிப்புடி நடனமாட வரிந்து கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
ஆனால் தமிழில் பிசியாக இருப்பதால் இளசுகள் பக்கம் திரும்பாத நயன்தாரா, தற்போது தெலுங்கில் நடிகர் சாய்குமாரின் மகன் நடிக்கும் படத்திற்கு எஸ் சொல்லியிருக்கிறாராம். தனது மகன் ரொம்ப சின்ன பையன் என்றாலும், நயன்தாரா இன்னமும் இளமையாகவே இருப்பதால் மகனுக்கு, மேட்சாக இருப்பார் என்று நினைக்கிறாராம் சாய்குமார்.
மேலும், ஏற்கனவே அனாமிகா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் டேக்கா கொடுத்ததால் நயன்தாரா மீது ஓராண்டு ரெட் கார்ட் போடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நயன்தாராவின் அபிமானிகள் ஒன்றுதிரண்டு அவருக்கு ஆதரவுக்குரல கொடுத்ததின் காரணமாக அந்த ரெட் கார்ட் கிரீன் கார்டாகி விட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment